செவ்வாய், 27 அக்டோபர், 2009

கயாவில் தரிசிக்கவேண்டியவை

பல்குனி நதியில் நீரிருந்தால் நீராடுதல்

விஷ்ணு பாத கோயிலில் பிண்டமிடுதல்

சுவாமி தரிசனம் செய்தல்

அட்சய வடம் சென்று பிண்டமளிதல்

தானம் செய்தல்

பிராமன போஜனம் செய்வித்தல்

அட்சய வட்டத்தில் பிராமணரிடம் திருப்தி கூறி ஆசி பெறுதல்

காய் பழாம் இல்லை மூன்றையும் விடுதல்

அருகிலுள்ள புத்த கயா சென்று புத்த விசாரங்களை தரிசித்தல்

கயா தானம் அளிப்பதின் பலன்

அன்ன தானம்-தரித்திரமும் கடனும் நீங்கும்.

வஸ்திர தானம்-ஆயுள் விருத்தி ஆகும்.

கோ தானம்-ரிஷிக்கடன் தேவகடன் பிதுர் கடன் அகலும்.

தீப தானம்-கண் பார்வையை தீர்க்கமாக்கும்

அரிசி தானம்-பாபங்களை போக்குகிறது

நெய்த் தானம்- நோய் தீர்க்கும்

தேங்காய் தானம்-நினைத்த காரியம் வெற்றியாகும்

பழங்கள் தானம்-புத்தியும் சித்தியும் கிட்டும்

கயா-சுற்றுலா ரயில் சேவை

சுற்றுலா ரயில் சேவையை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்குகிறது. "பாரத தரிசனம்' என்ற இச் சுற்றுலா ரயில் மதுரையில் இருந்து புறப்படுகிறது.

காசி, கயா, அலாகாபாத் உள்ளிட்ட பல்வேறு புண்ணியத் தலங்களுக்கு இந்த ரயில் சேவை இயக்கப்படும். 9 நாள்கள் கொணட இந்த யாத்திரைக்கு கட்டணம் நபருக்கு ரூ.4,620 மட்டுமே. இதில் பக்தர்களுக்கு 3 வேளை தென்னிந்திய சைவ உணவு, காலையில் காபி, உள்ளூர் சுற்றிப் பார்த்தல், தங்கும் இடம், மேலாளர், பாதுகாவலர் உள்ளிட்ட வசதிகள் அடங்கும்.
இந்த யாத்திரைக்கு முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி அங்கீகாரம் பெற்ற டிராவல் டைம்ஸ் (இந்தியா) நிறுவனத்தை தொடர்பு கொளளலாம். இதற்கான தொ.பே. எண்கள்:சென்னை-28461131,28461113,9790926956. மதுரை- 0452-4391228, 9003933269.
கோயம்புத்தூர்-0422-2496667, 9345796778.

http://www.gaya.bih.nic.in

கயா மாவட்டத்தில் உள்ள கோவில்களின் தரிசன நேரம், புகைப்பட காட்சிகளும் சாஸ்த்ரிகளின் பெயர், போன் நம்பர், விழாக் காலங்களில் அமுல் படுத்தும் நடைமுறை என அனைத்தையும் அறிய மேற்க்கண்ட வலைத்தளத்தில் காணலாம். பிண்டதானம் செய்யும் நேரமும் கட்டணமும் அறியலாம்.

கயா ஷேத்திர மகிமை

முதலில் பிரயாகை-அடுத்து காசி-மூன்றாவதாக கயாவிற்க்கு வந்து சிரார்த்தம் முடிக்கவேண்டும் காரணம் என்னவென்றால் இல்லங்களில் மூதாதையருக்கு திதி கொடுக்கும்போது அட்சய வடம் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது.அகரம் மத்யம் மூலம் என்றும் கூறப்படுகிறது. அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுறது. இந்த ஆலமரத்தின் மூல வேர் பிரயாகையில் இருக்கிறது. நடுப்பாகம் மத்யம் காசியில் உள்ளது. நுனிப்பாகம் அகரம் கயாவில் உள்ளது. இந்த மூன்று ஸ்தலங்களையும் இந்த ஆலமரம் இணைத்து வைக்கிறது.

கயாவில் சிரார்த்தம்: செய்வதில் உள்ள விசேஷம் பிரம்மனின் வரம் பெற்ற கயாசுரன் என்ற அசுரன் தன உடலைத் தொட்டவர்கள் அனைவரும் சொர்க்கம் சேர வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வேண்டினான். அவரும் வரத்தை தரவே விபரீத பலனாக நல்லவர் கேட்டவர் யாராயிருப்பினும் கயாசுரன் மீது பட்டு சொர்க்கம் அடைந்தனர். அதனால் புண்ணியம் செய்தவர் செய்யாதவர் எல்லாம் ஒன்றாகி விட்டது .அதனால் மகாவிஷ்ணுவை சரணடைந்து தேவர்கள் வரத்தை திரும்ப பெற கோரினர்.

விஷ்ணுவும் கயாசுரன் சிரசில் தமது பாதத்தை வைத்து அழுத்தி பாதாளலோகத்திற்கு அனுப்பிவிட்டார் .விஷ்ணு பாதம் பட்டதால் கயாசுரன் புனிதமாகி விஷ்ணுவிடம் வரம் கேட்டார். உலகில் மகனாகப் பிறந்தவன் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டும். பெற்றோர் காலமான பிறகு அவர்களுக்கு திதி கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும்.

என் சரீரமாகிய இந்த இடத்திற்கு வந்து பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் பதவி அடைய வேண்டி வரம் கேட்டார். அதனால் கயாசுரனின் உடலான கயா புனித ஸ்தலமாக விளங்குகின்றது. பல்குனி நதி, விஷ்ணு பாதம் ஆகிய இடங்களில் இரண்ய சிரார்த்தம், அட்சய வடத்தில் அன்ன சிரார்த்தமும் செய்ய வேண்டும்.


புத்த கயாவில் 300 அடி உயரமுள்ள விஷால் புத்தர் மந்திர் அருகில் எங்கள் குழுவினர் கோபாலன் ஜெயலக்ஷ்மி தம்பதியினருடன்

கயா-புத்த கயா

புத்த கயா முக்கியமான சில பௌத்த மடாலயங்களை தரிசித்து மன நிம்மதி அடைந்தோம். தியானம் செய்யத் தோன்றும் வசீகரமான இடம். பல பௌத்த பிட்சுக்கள் நடமாடிய இடங்களில் நாமும் நடக்கிறோம் என்பதே மகிழ்ச்சி. பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் பெளத்த பிரகாரங்கள் அவர்கள் நாட்டின் சம்பிரதாயப்படி கலை யழகு மிளிர கட்டியுள்ளதை பார்த்து ரசிக்க நேரம் தான் போதவில்லை.



கயா-அஷய வடம் (ஆலமரம்)

பின்னர் ஒரு ஆட்டோ மூலம் அஷய வடம் சென்றோம். சிறிது உயரமான குன்றின் மீது அமைந்துள்ளதால் படிகள் மீது ஏறி அஷய வடம் சென்றோம். சாஸ்திரிகள் எங்களுடனே வந்தார்.

அஷய வடத்தின் இலைகள் இலையுதிர்காலத்தில் கூட பசுமையாக உள்ளது

அஷய வடம் மரத்திற்கு அடியில் விக்கிரகங்கள் இருக்கின்றன. மரத்தை வலம் வந்து அதனடியில் அமர்ந்து காரியங்களை செய்யவேண்டும்.

மூன்றாவது கலசத்திலிருந்து தயாரித்த 64 பிண்டங்களிலிருந்து ஒரு பிண்டத்தை மட்டும் காகத்திற்கு வைத்தோம். அதுவரை தென்படாத ஒரு காகம் நாங்கள் பிண்டம் வைத்தவுடன் ஓடோடி வந்து பிண்டத்தை ரசித்து சாப்பிட்டது. அமாவாசை தர்ப்பணத்தின் போது கா கா என்று கத்தி வரும் காகம் அன்று கத்தாமலே வந்தது மட்டுமின்றி, ரசித்து சாப்பிட்டது. எங்கள் மூதாதையர் அவர் வடிவில் வந்து உணவருந்தி எங்களை ஆசீர்வதிததாக சந்தோஷமடைந்தோம். அஷய வடத்தில் படைக்கப்படும் பிண்டத்தை காகம் கிழக்கே எடுத்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

பொதுவாக சிரார்த்தத்தில் பெற்றோர்க்கும் மூதாதையருக்கும் தான் செய்வது வழக்கம். சாஸ்திரிகள் சங்கல்ப தர்ப்பண சிரார்த்த மந்திரங்கள் சொன்னபடி நாங்களும் எங்கள் எனது வழி எனது மனைவி வழி மூதாதையர்கள் அனைவருக்கும் தாய் வழி தகப்பனார் வழி உடன் பிறந்தோர் சகோதர சகோதரிகள் அத்தை மாமா சித்தி சித்தப்பா என அணைத்து உறவு முறையினருக்கும் தனி தனியாக பெயர் கூறியும் பெயர் தெரியாவிடின் உறவு சொல்லியும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் உறவினர்கள் விபத்தினாலோ குறைப்பிரசவத்தலோ மரித்திருப்பின் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் வளர்ப்பு பிராணிகள் - நாங்கள் எங்களது உயிருக்கு உயிராக வளர்த்த Scooby யும் எங்கள் மேல் அளவு கடந்த பாசம் வைத்து உற்ற நண்பனாக இருந்து உயிர் நீத்த Scooby க்காக மீதியிருந்த 63 பிண்டங்களிலிருந்து பிண்டம் அளித்தோம்.

மூதாதையர்கள் அனைவரும் ஸ்வர்க்கத்தில் நீர், உணவு, ஆசை, பற்று இன்றி றுபிரப்பின்றி, முக்தி அடையவேண்டி பிரார்த்தனை செய்து அங்குள்ள பிராம்னர்களுக்கு தானம் அளித்தோம். அவர்களும் மிகுந்த திருப்தியுடன் திருப்தி திருப்தி திருப்தி என்று சொல்லி ஆசீர்வதித்தனர்.

இந்த புனித யாத்திரையை மேற்கொண்டவர்கள் காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்று பற்றுகளை விட்டு விட்டதன் அடையாளமாக ஒரு காய், ஒரு ம், ஒரு இலை ஆகியவற்றை மந்திரத்தை சொல்லி இங்கு துறந்தோம். பிறகு அவற்றை வாழ்நாளில் பயன்படுத்தக்கூடாது.

அஷயவடதிலுள்ள பண்டாக்களுக்கும், பிராமனர்களுக்கும் தானம் செய்தபின்னர் அருகிலுள்ள வியாபாரி குழைந்தைகளும் வந்து சேர்த்தனர், அவர்களுக்கும் தானமளித்தோம்.

பின்னர் நேராக சாஸ்த்ரிகள் வீட்டிற்கு வந்தோம். உணவு சாஸ்திரிகள் வீட்டிலேயே தயாரித்திருந்தனர். பிராமன போஜனம் இரண்டு நபர்களுக்கு செய்வித்து தானம், தட்சணையும் அளித்தோம். மூதாதையருக்கு உணவளித்தது போன்ற திருப்தி ஏற்ப்பட்டது. பின்னர் சாஸ்த்ரிகளுக்கு சம்பாவனை செய்து ஆசி பெற்று நாங்களும் போஜனம் செய்தபின்னர் மடத்திற்கு வந்து சிரமபரிகாரம் செய்தபின்னர் 4.00 மணிக்கு புத்த கயா சென்றோம்.